சனி, 1 ஜனவரி, 2011

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!

வருக புத்தாண்டே... வளம்தனைத் தருக புத்தாண்டே.......!

 வணக்கம் நண்பர்களே நாம் அனைவருமே புத்தாண்டை (2011) கொண்டாடிக்கொண்டு  உள்ளோம்,  இந்த தருணத்தில் நமது வலைப்பூ மூலம் உங்கள் அனைவருக்கும் வலையுலகில் என்னோடு சேர்ந்து பயணிக்கும் சக பதிவர் நண்பர்களுக்கும் பதிவுகளை மின்னஞ்சலில் வாசிக்கும் நண்பர்களுக்கும் மற்றும் பதிவுகலக வாசகர்களுக்கும்  ஜெய் குணா வலைதளம் ( BLOGSPOT ) (http://www.jeiguna.blogspot.com) முலம் எனது நெஞ்சார்ந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்ளுகிறேன்


வருக புத்தாண்டே.........

கசக்கின்ற துன்பத்தை எடு
இனிக்கின்ற இன்பத்தை கொடு

அழிக்கின்ற ஆயுதங்கள் எடு
காக்கின்ற கரங்களை கொடு

கெடுக்கின்ற பழக்கங்கள் எடு
வளர்கின்ற எண்ணங்கள் கொடு

அழுகின்ற கவலைகள் எடு
சிரிக்கின்ற மலர்களை கொடு

உதிர்கின்ற நிலைகளை எடு
தளிர்கின்ற மழலைகள் கொடு

அடிக்கின்ற கைகளை எடு
அணைக்கின்ற இதயங்கள் கொடு

சுடுகின்ற தீமையை எடு
குளிர்கின்ற நன்மைகள் கொடு

உழைக்கின்ற குழந்தைகள் எடு
உணர்கின்ற பெற்றோர்கள் கொடு

நடிக்கின்ற அரசியல் எடு
துடிக்கின்ற இளைஞர்கள் கொடு

மடிகின்ற ஜாதிகள் எடு
மறக்கின்ற மனிதத்தை கொடு

இனியும் கேட்டு கொண்டெ இருப்பேன்
எனக்கு எடுத்து கொடு...
வருக புத்தாண்டே..வளம்தனைத்
தருக புத்தாண்டே..!

இளைஞர் படை கொண்டே..தமிழ்
மறவர் துணை கொண்டே.. (வருக)

வறுமை புறமோட..கல்வித்
திறமை வழிகாட்ட.. (வருக)

வயல்கள் கதிரோடி...உயர்
நதிகள் வழிந்தோடி.. (வருக)

ஊழல் வெளியேற..நேர்மைச்
சூழல் உருவாக.. (வருக).


அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக